Tuesday, October 31, 2017

வா காதல் செய்வோம்!


நீயும் நானும்
நனைவதற்காகவே
பெய்கிறது மழை!
வா காதல் செய்வோம்!
                            - இயற்கை நேசன்

கல்லூரிக் காலத்தில்....

கல்லூரிக் காலத்தில்
நீரின்றி அமையாது உலகு!
என்று படிக்கும் போதெல்லாம்
நீராக நீயே தெரிந்தாய்
என் உலகில்!!
                        -இயற்கை நேசன்

கைக்குட்டையைத் தேடும் வழிப்போக்கன்..


அது ஒரு மழைக்காலம்!
மழையில் நனைந்திடாமல் இருக்க 
ஓடி ஒதுங்கினோம்
சில மழைத்துளிகளால்
நான் லேசாக நனைந்திருந்தேன்
நீயும் தான்!  - உன்
கைக்குட்டையால் என் நெற்றி துடைத்தாய்
நினைவிருக்கிறதா?
இதோ 
இப்போதும் மழைக்காலம் 
நனைந்தபடியே 
தேடுகிறான் வழிப்போக்கன்
தொலைத்துவிட்ட  கைக்குட்டையை...
                                                 - இயற்கை நேசன்

Tuesday, October 17, 2017

தேடல் எதுவுமின்றி.....

மீண்டும் வருவேன் என்று
சொல்லித்தானே சென்றேன்
ஏன் அத்தனை அவசரம் உனக்கு
நம்பிக்கையில்லாமலா
சென்றாய்...
உன் காதலின் ஆழத்தை நீயே
நம்பவில்லையெனில்
யார் தான் நம்புவார்.
உள்ளத்திலிருந்தது
காதல் தானே? 
காமத்திலானா மன இச்சைகளா?
ஆசைஆசையாய் தானே 
காதலித்தாய்
பின் ஏனடி விட்டுச் சென்றாய்
நம்பிக்கையாய் நான் 
வார்த்தைகள் சொல்லவில்லை தான்
ஆனாலும் வருவேன் என்று
சொல்லித்தானே சென்றேன்.
நீ அவசரப்பட்டதாலே
நான் அவதிப்படுகின்றேன்
நீயும் ஓர் நாளாவது
அவதிப்படுவாய்
இது என் சாபமல்ல..!
காதலின் வரம்!!
உண்மையாய் காதலித்திருந்தால்..
அந்நாளில்...
என்னை நினைத்துக் கொள்வாய்!
என் நினைவுகள் உன்னை சூழும்!
என் அன்பு... 
உன்னை அரவணைக்கும்
நாம் சந்திக்காவிட்டாலும்...
சந்திப்போம் என்றே மனம் சொல்கிறது
காலம் என்ன செய்கிறதென
காத்திருக்கிறேன் தேடல் எதுவுமின்றி...
                          - இயற்கை நேசன்


Saturday, October 7, 2017

வழிப்போக்கனின் நினைவுகள்...

துணையாக வரமுடியாத
ஏக்கத்தோடே
கடந்து செல்கிறதென்
வாழ்நாள்!
இறப்புக்குள்
உன் கரம் கோர்த்து
சில மணித்துளிகளேனும்
ஒரு சிறு நடையாவது
நடந்திடவே ஏங்கித்துடிக்கிறது மனசு
நொடிப்பொழுதில்
தவறவிட்ட
தொலைதூர ரயிலை
வெறித்துப் பார்க்கிறான்
வழிப்போக்கன்!
                          

வா ஒருநாள்...

உன்னுடன் பேசாமலிருந்தால் என்ன என்று தோன்றும் போதெல்லாம் உன் நினைவுகள் ஆக்ரமித்துக் கொள்கிறது என்னுள்... கல்லெறிந்த குளத்தின் அலைகளைப்...