Tuesday, October 31, 2017
கல்லூரிக் காலத்தில்....
கல்லூரிக் காலத்தில்
நீரின்றி அமையாது உலகு!
என்று படிக்கும் போதெல்லாம்
நீராக நீயே தெரிந்தாய்
என் உலகில்!!
-இயற்கை நேசன்
நீரின்றி அமையாது உலகு!
என்று படிக்கும் போதெல்லாம்
நீராக நீயே தெரிந்தாய்
என் உலகில்!!
-இயற்கை நேசன்
Tuesday, October 17, 2017
தேடல் எதுவுமின்றி.....
மீண்டும் வருவேன் என்று
சொல்லித்தானே சென்றேன்
ஏன் அத்தனை அவசரம் உனக்கு
நம்பிக்கையில்லாமலா
சென்றாய்...
உன் காதலின் ஆழத்தை நீயே
நம்பவில்லையெனில்
யார் தான் நம்புவார்.
உள்ளத்திலிருந்தது
காதல் தானே?
காமத்திலானா மன இச்சைகளா?
ஆசைஆசையாய் தானே
காதலித்தாய்
பின் ஏனடி விட்டுச் சென்றாய்
நம்பிக்கையாய் நான்
வார்த்தைகள் சொல்லவில்லை தான்
ஆனாலும் வருவேன் என்று
சொல்லித்தானே சென்றேன்.
நீ அவசரப்பட்டதாலே
நான் அவதிப்படுகின்றேன்
நீயும் ஓர் நாளாவது
அவதிப்படுவாய்
இது என் சாபமல்ல..!
காதலின் வரம்!!
உண்மையாய் காதலித்திருந்தால்..
அந்நாளில்...
என்னை நினைத்துக் கொள்வாய்!
என் நினைவுகள் உன்னை சூழும்!
என் அன்பு...
உன்னை அரவணைக்கும்
நாம் சந்திக்காவிட்டாலும்...
சந்திப்போம் என்றே மனம் சொல்கிறது
காலம் என்ன செய்கிறதென
காத்திருக்கிறேன் தேடல் எதுவுமின்றி...
- இயற்கை நேசன்
- இயற்கை நேசன்
Saturday, October 7, 2017
வழிப்போக்கனின் நினைவுகள்...
துணையாக வரமுடியாத
ஏக்கத்தோடே
கடந்து செல்கிறதென்
வாழ்நாள்!
இறப்புக்குள்
உன் கரம் கோர்த்து
சில மணித்துளிகளேனும்
ஒரு சிறு நடையாவது
நடந்திடவே ஏங்கித்துடிக்கிறது மனசு
நொடிப்பொழுதில்
தவறவிட்ட
தொலைதூர ரயிலை
வெறித்துப் பார்க்கிறான்
வழிப்போக்கன்!
ஏக்கத்தோடே
கடந்து செல்கிறதென்
வாழ்நாள்!
இறப்புக்குள்
உன் கரம் கோர்த்து
சில மணித்துளிகளேனும்
ஒரு சிறு நடையாவது
நடந்திடவே ஏங்கித்துடிக்கிறது மனசு
நொடிப்பொழுதில்
தவறவிட்ட
தொலைதூர ரயிலை
வெறித்துப் பார்க்கிறான்
வழிப்போக்கன்!
Subscribe to:
Posts (Atom)
வா ஒருநாள்...
உன்னுடன் பேசாமலிருந்தால் என்ன என்று தோன்றும் போதெல்லாம் உன் நினைவுகள் ஆக்ரமித்துக் கொள்கிறது என்னுள்... கல்லெறிந்த குளத்தின் அலைகளைப்...
-
உன்னிடம் பேச ஆயிரம் கதைகள் இருந்தாலும் மௌனமே என் சொற்களைத் தாங்கி நிற்கிறது உன்னிடம் பேச ஆயிரம் வார்த்தைகள் அணி வகுத்தாலும் உன் ப...
-
என்ன செய்ய இயலும் அன்பால் வீழ்த்தப்பட்ட எளியவனால்... தூரமாய் கடந்து நிற்கும் உன்னிடம் சில எதிர்பார்ப்புகளைத் தவிர... பேரன்பினைத் தவிர...