உன்னிடம் பேச
ஆயிரம் கதைகள் இருந்தாலும்
மௌனமே என் சொற்களைத்
தாங்கி நிற்கிறது
உன்னிடம் பேச
ஆயிரம் வார்த்தைகள்
அணி வகுத்தாலும்
உன் பார்வையும்
சிநேகமான சிரிப்பும்
வார்த்தைகளை
வலுவிலக்கச் செய்கிறது.
நம் திசைகளை
எதிரும் புதிருமாய்
நாம் மாற்றிக்கொண்டாலும்
மையத்தில் வந்து நிற்கிறது
நமக்கான நினைவுகள்
உன்னைப்போலவே
எனக்கும்...
என்ன செய்யப்போகிறோம்
என்றதொரு கேள்விகளை
நாம் கேட்டுக்கொள்கின்றோம்
விடைகளே தெரியாமல்...
இருப்பினும்
விடைகளற்ற கேள்விகள்
என்று இங்கு எதுவுமில்லை!
வழிப்போக்கனுக்கு
வாழிடம் தேவையில்லை
என்றாலும்
வாழிடமாய் மாறிப்போனது
மனம்!
நம் மனங்களில்
நமக்கான
நினைவுகளைப் போல்...
நாம் வாழ்வோம் நம் மனங்களில்!
- இயற்கை நேசன்
தாங்கி நிற்கிறது
உன்னிடம் பேச
ஆயிரம் வார்த்தைகள்
அணி வகுத்தாலும்
உன் பார்வையும்
சிநேகமான சிரிப்பும்
வார்த்தைகளை
வலுவிலக்கச் செய்கிறது.
நம் திசைகளை
எதிரும் புதிருமாய்
நாம் மாற்றிக்கொண்டாலும்
மையத்தில் வந்து நிற்கிறது
நமக்கான நினைவுகள்
உன்னைப்போலவே
எனக்கும்...
என்ன செய்யப்போகிறோம்
என்றதொரு கேள்விகளை
நாம் கேட்டுக்கொள்கின்றோம்
விடைகளே தெரியாமல்...
இருப்பினும்
விடைகளற்ற கேள்விகள்
என்று இங்கு எதுவுமில்லை!
வழிப்போக்கனுக்கு
வாழிடம் தேவையில்லை
என்றாலும்
வாழிடமாய் மாறிப்போனது
மனம்!
நம் மனங்களில்
நமக்கான
நினைவுகளைப் போல்...
நாம் வாழ்வோம் நம் மனங்களில்!
- இயற்கை நேசன்
No comments:
Post a Comment