Friday, March 2, 2018

வா ஒருநாள்...

உன்னுடன்
பேசாமலிருந்தால் என்ன
என்று தோன்றும் போதெல்லாம்
உன் நினைவுகள் ஆக்ரமித்துக் கொள்கிறது
என்னுள்...
கல்லெறிந்த குளத்தின்
அலைகளைப் போல் அமைதியின்றி
தவிக்கிறது மனம்.
சந்திக்கும் தூரத்தில் நீ
இல்லை.
நம் சந்திப்பும் தண்டவாளங்களைப்
போலவே நீள்கிறது தனித்தனியே
இணையாத இரு கோடுகளாய்..
இருப்பினும் அந்த கனங்களும்
மகிழ்வாய் கரைகிறது
மேலும் சேர்க்கிறது சில நினைவுத் துளிகளை...
வா ஒருநாள் கைப்பற்றி
வனமெங்கும் நடந்திடுவோம்
மனமெங்கும் பரவசத்துடன் மகிழ்வாய்...
வாழ்வின் இன்பங்களை உடலால் அல்ல
நினைவுகளால் பரவசப்படுத்துவோம்.
                                           - இயற்கை நேசன்

No comments:

Post a Comment

வா ஒருநாள்...

உன்னுடன் பேசாமலிருந்தால் என்ன என்று தோன்றும் போதெல்லாம் உன் நினைவுகள் ஆக்ரமித்துக் கொள்கிறது என்னுள்... கல்லெறிந்த குளத்தின் அலைகளைப்...