Tuesday, November 21, 2017

மெளனித்து கடக்கின்றேன்..

என்ன செய்ய இயலும்
அன்பால் வீழ்த்தப்பட்ட
எளியவனால்...
தூரமாய் கடந்து நிற்கும்
உன்னிடம் சில
எதிர்பார்ப்புகளைத் தவிர...
பேரன்பினைத் தவிர
வேறொன்றும் வேண்டாம்
எனக்கு...
அதையென்றும்
நிறுத்தி விடாதே

போர்களின்றி
போர்க்கைதியாய்
நான் உன்னிடம்...
சுவரற்ற சிறையில்
சுதந்திரமாய் இருப்பினும்
வெளியேறாதபடியே
வீழ்த்தப்பட்டுள்ளேன்.

காலங்கள் தீர்மானிக்கட்டும்
என் தீர்மானங்களை...
அதுவரை
மௌனித்து கடக்கின்றேன்
சில நிபந்தனைகளின் படி..!
                                       - இயற்கை நேசன்

No comments:

Post a Comment

வா ஒருநாள்...

உன்னுடன் பேசாமலிருந்தால் என்ன என்று தோன்றும் போதெல்லாம் உன் நினைவுகள் ஆக்ரமித்துக் கொள்கிறது என்னுள்... கல்லெறிந்த குளத்தின் அலைகளைப்...